தமிழ்த்துறை

இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை இக்கல்லூரியிலேயே பயிலும் வண்ணம் அனைத்துப் பிரிவுகளும் தமிழ்த்துறையில் உள்ளன.

மாணவியர்க்குப் பயன்படும் வகையில் பொது நூலகமும் துறை நூலகமும் தனித்தனியே அமைந்துள்ளன. ஏறத்தாழ 3000 நூல்களுக்கு மேல் தமிழ்த்துறை நூலகத்தில் உள்ளன. கல்லூரியில் அதிகளவு நூல்கள் தமிழ்த்துறையில் மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு விதிமுறைக்கு உட்பட்டு நெருக்கடி இல்லாத வகையில் வகுப்பறைகள் அமைந்துள்ளன. அனைத்தாண்டு மாணவியர்க்கும் தனித்தனி வகுப்பறைகள் ஒதுக்கப் பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

ஆய்வு மாணவர்க்குப் பயன்படும் வகையில் ஆய்வுக்கூடம் ஒன்று கணினி வசதியோடு விரைவில் வரவுள்ளது.